search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைக்கு வாய்ப்பு"

    இலங்கை கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #TNRains #IMDChennai
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மழை முன்னறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

    இலங்கை கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.



    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 23% குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பை விட 55% குறைவாக மழை பெய்துள்ளது.

    இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. #TNRains #IMDChennai
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRain
    சென்னை:

    பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது.

    இதற்கிடையே தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.


    இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (20-ந் தேதி) வடதமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

    தொடர்ந்து 21-ந்தேதி தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என்றும், 22-ந்தேதி அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRain #PeitiCyclone
    தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக 12-ந்தேதி முதல் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளதால் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. #Rain #Coastalarea
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று உருவானது.

    அந்த காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் நேற்று மாலை நிலைகொண்டு இருந்தது.

    இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தினர் தொடர்ந்து கண்காணித்து தகவலை வெளியிட்டு வருகிறார்கள். இன்று காலை வெளியிட்ட தகவல்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

    சற்று வலு அதிகரித்து இருப்பதால் அந்த தாழ்வு மண்டலம் தற்போது வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர தொடங்கி இருக்கிறது. இன்னும் 48 மணி நேரத்தில் அது அந்தமானை கடந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் அது புயல் சின்னமாக மாறும் என்று கணித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக புயல் சின்னம் தமிழக கடலோரத்தை நெருங்கி வர வாய்ப்பு உள்ளது.

    12-ந்தேதிதான் புயல் சின்னத்தின் நகர்வை பொறுத்து அது கடலோரத்தில் எங்கு கரையை கடக்கும் என்பது தெரியவரும். தற்போதைய கணிப்பின்படி வட தமிழ்நாட்டில் அந்த புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தினர் கருதுகிறார்கள்.

    இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு ஆசிய நாடுகள் பெயர் சூட்டி வருகின்றன. அதன்படி இந்த புயலுக்கு “பெய்ட்டி” என்று பெயர் சூட்டப்படும். இந்த பெயரை தாய்லாந்து நாடு வழங்கி உள்ளது.



    சமீபத்தில்தான் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்து விட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் பெய்ட்டியும் வந்து வட தமிழ்நாட்டில் பெயர்த்து எடுத்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலையே நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் 2 நாட்களுக்கு பிறகு அதாவது 12-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    12-ந்தேதி முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கணிசமான அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக 12-ந்தேதி முதல் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்து இருப்பதால் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    பெய்ட்டி புயல் சென்னை அருகே கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் 12-ந்தேதி புயல் சின்னம் உருவான பிறகே அதன் நகர்வு திசையை துல்லியமாக கணிக்க முடியும். எனவே தமிழக கடலோரத்தில் புதிய புயல் எந்த பக்கம் தாவும் என்பது 12-ந்தேதி தெரிய வரும். #Rain #Coastalarea

    வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TNRain #WeatherCentre
    சென்னை:

    தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அதிகாரி இன்று கூறியதாவது:-

    இலங்கையை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியிலும், தமிழகத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியிலும் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.


    இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரம், வானூர் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம், அனைக்காரன் புதூர் 8 செ.மீட்டரும், பேச்சிப்பாறை, சத்தியமங்கலம், பாபநாசம், மரணக்காணம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.  #TNRain #WeatherCentre
    வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #TNRains
    சென்னை:

    வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் நேற்று முன்தினம் அதிகாலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை தாக்கியது. இரு மாநிலத்திலும் 4 மாவட்டங்களில் கடுமையான வெள்ளச்சேதம் ஏற்பட்டது.

    டிட்லி புயல் கரையை கடக்காமல் காற்றழுத்த மண்டலமாக மாறி கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் நோக்கி நகர்ந்து சென்று தாக்கியது. நேற்று இரவு ஒடிசாவின் கியோஞ்சர் நகருக்கு தெற்கே 70 கி.மீ தொலைவில் நிலை கொண்டு இருந்தது.

    இன்று இந்த காற்றழுத்த மண்டலம் மேலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்குவங்காள கடற்கரை மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்றும் மணிக்கு 55 கி.மீ வேகம் முதல் 65 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    இதற்கிடையே மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் 16-ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNRains

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #MeteorologicalDepartment
    சென்னை:

    தெற்கு உள் கர்நாடகா பகுதியில் இருந்து தமிழகத்தின் மன்னார் வளைகுடா வரையில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் வெப்ப சலனம் காரணமாகவும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.



    அடுத்த 3 நாட்களுக்கு அநேக இடங்களிலும் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஓசூரில் 8 செ.மீ., கோவையில் 6 செ.மீ, வால்பாறையில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

    நீலகிரி ஜி.பஜார், பீளமேடு, சூளகிரி, பரமத்தி, கோவை தெற்கு, ஈரோடு ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும் தாளவாடி, தளி, அரவாக்குறிச்சி, ஏற்காட்டில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. #Rain #MeteorologicalDepartment

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. #TamilNaduRain
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உள்மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 26-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

    குறிப்பாக 26-ம் தேதி தொலைதூரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. #TamilNaduRain
    ×